• Sep 21 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

16-வது வயதில் விஜயுடன் பகவதி என்ற திரைப்படத்தில் நடித்தர் தான் நடிகர் ஜெய்.இதன் பின்பு சென்னை 28 என்ற முக்கிய கதாப்ப்த்திரமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தற்போது வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளார்.

மேலும் இவர் நடித்த கோவா, வாமனன், எங்கேயும் எப்போதும், வடகறி மற்றும் திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற திரைப்படங்கள் பாராட்டப்படும் அளவிற்கு வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், தற்போது பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் ஒரு பட்டாம்பூச்சி என்ற படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்கவுள்ளார்.

த்ரில்லார் பாணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கு நடிகர் ஜெய் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் இடம்பெற்றுள்ள ஒரு குத்துப்பபாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

மேலும் இப்படாலை இசையமைப்பாளரும் ஜெய்யின் சித்தப்பாவுமான ஜெய் பாடியுள்ளார். இப்பாடல் சோசியல் மீடியாவில் வைரலானது.

இந்த நிலையில், நடிகர் ஜெய்க்கு ஹீரோவாய்ப்புகள் குறைந்து, தற்போது, வில்லன் கதாப்பாத்திரங்கள் அதிகம் தேடி வருவதால், அவர் விஜய் சேதுபதிபோல் வில்லனாக நடிக்கவும் சம்மதித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

ஆனால், கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்தால் அதில் நடிக்கவும் இதற்கிடையே வில்லனாக நடிக்கவும் முடிவெடுத்துள்ளதாகவும்,இதற்கு அதிக சம்பளம் ஜெய் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement