பிரபாஸ் கிருதி சனோன் சைப் அலிகான் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதி புருஸ். இந்த திரைப்படம் குறித்து அதன் டீசர் வெளிவர முன்னர் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இருப்பினும் அதன் டீசர் வெளிவந்த பின்னர் இந்தத் திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதனால் இயக்குநர் மனமுடைந்து போனார். அதுமட்டுமல்லாது வெளியீட்டு நாளில் டீசரைப் பார்த்தபோது பிரபாஸ் அதிருப்தி அடைந்ததாகவும், மேலும் திருத்தங்களைச் செய்யுமாறு இயக்குநரைக் கேட்டுக்கொண்டதாகவும் ஒரு செய்தி இருந்தது.
இருப்பினும், ஓம் ரவுத் மற்றும் பிரபாஸ் கலந்து கொள்ளும் இன்றைய பொது நிகழ்வு, இருவருக்கும் இடையே எந்தவிதமான முரண்பாடு, தவறான புரிதல் அல்லது உள் மோதல்கள் இல்லை என்பதையும், அவர்களுக்கு இடையே எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
தசரா பண்டிகையையொட்டி டெல்லியில் நடந்த ராவண தகனம் நிகழ்ச்சியில் ஓம் ராவுத் மற்றும் பிரபாஸ் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், நடிகர்-இயக்குநர் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர் மற்றும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, ரசிகர்களிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஆதிபுருஷத்தில் ராமர் வேடத்தில் வரும் பிரபாஸ், ராவணன் உருவ பொம்மையை வில்லால் தீ வைத்து எரித்தார்.
Listen News!