• Sep 20 2024

40வயதாகியும் திருமணம் செய்யாத நடிகை திரிஷாவின்... சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம்..அந்த நடிகருடனா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்தியத் திரையுலகில் அறிமுக காலத்திலிருந்து இன்றுவரை முன்னணி நட்சத்திர நாயகியாகவே வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகையே தன்னுடைய நடிப்பினால் கட்டிப் போட்டிருக்கின்றார்.

இவர் திரைப்படங்களில் அறிமுகமாவதற்கு முன்னர் சென்னை அழகியாக 1999-ஆம் ஆண்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் வெளியாகிய படங்களாக 'சாமி, கில்லி, மௌனம் பேசியதே, அலை, நந்து, பீமா' எனப் பல படங்களையும் குறிப்பிடலாம். அதுமட்டுமன்றி பல விருதுகளையும் வென்றிருக்கின்றார்.இவர் நடிப்பில் தற்போது 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'ராங்கி' ஆகிய படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன

இவ்வாறுஇருக்கையில் 40 வயதாகியும் திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை என்பது தான் அனைவரதும் கேள்வியாக மாறி இருக்கிறது. இருப்பினும் அந்த கேள்விகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷா பல விஷயங்களுக்காக சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறார். மேலும் அப்படி அவர் சர்ச்சையாக பேசப்பட்ட ஒரு விஷயம் நடிகர் ராணாவுடனான திருமணம்.பிரபல தெலுங்கு நடிகரான ராணா சில வருடங்களுக்கு முன்பு ஒன்றாக காணப்பட்டு வந்தார்.

அப்படி அவர்கள் ஒன்றாக கோவா பார்ட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட போட்டோ இருதரப்பு குடும்பங்கள் மத்தியிலும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்கியதாக கூறப்பட்டது.

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்




Advertisement

Advertisement