• May 04 2024

அஜித்திற்குப் பதிலாக வந்த யாஷிகா…எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பிற்கும், அழகிற்கும் மயங்காத ரசிகர் கூட்டமே இல்லை என்று தான் கூற முடியும். அந்தளவிற்கு தன்னுடைய திறமையினால் பல மக்கள் மனங்களை கொள்ளையடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கின்றார். இவர் நடத்த படங்களோ ஏராளம். அதில் அதிகமானவை வெற்றிப்படங்களாக உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அஜித் அவ்வப்போது தனக்குப் பிடித்த இடங்களுக்கு விசிட் அடித்து தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவது வழமை. சமீபத்தில் கூட தன்னுடைய குடும்பத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்திருந்தார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலராலும் பேசப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது எச்.வினோத் என்பவரின் இயக்கத்தில் உருவாகி வருகின்ற 'AK 61' என்ற படத்தின் படப்பிடிப்பிலும் விரைவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் அஜித் திடீரென சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்துடன் வருகை தரவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் மாரியம்மன் கோவிலுக்கு வந்து குவிந்திருந்தனர். வெகு நேரம் ஆகியும் செல்லாமல் அங்கு அஜித்திற்காக காத்திருந்தனர். ஆனால் கடைசி வரைக்கும் அஜித் மாரியம்மன் கோவிலுக்கு வரவே இல்லை.

எனினும் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடிகை யாஷிகா அந்த இடத்திற்கு வந்திருந்தார். அஜித்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு யாஷிகா வந்திருந்தமை மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. எனினும் சங்கடப்படாமல் யாஷிகாவுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துள்ளனர் நம்ம தல ரசிகர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement