• May 18 2024

சிந்தனை தவறாக இருந்தால் ரஜினிக்கு எப்படி நிம்மதி கிடைக்கும்: சீமான் கூறிய கருத்து..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் அம்பத்தூரில் ஆர்ப்பாட்டம் ஒள்று இடம் பெற்றது.

மின் கட்டணத்தை உயர்த்தப் போவதாக தமிழக அரசு தெரிவித்ததை எதிர்த்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.

மேலும் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சீமான். அப்பொழுது ரஜினிகாந்த் கூறியது பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டார்கள்.

அண்மையில் நுங்கம்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி சாதி மற்றும் அறிவை இணைத்துப் பேசினாரே. அது பற்றி உங்களின் கருத்து என்னவென்று சீமானிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சீமான்….

ரஜினியின் கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கது. மேலும் அதே நிகழ்ச்சியில் பணம், புகழ், பெயர் இருந்தாலும் தனக்கு 10 சதவீதம் கூட நிம்மதி இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சிந்தனை இந்த அளவுக்கு தவறாக இருந்தால் அப்புறம் மன நிம்மதி எப்படி கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தன் மூத்த மகளான ஐஸ்வர்யா கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதால் ரஜினி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் விரைவில் மீண்டும் சேர்ந்து வாழப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement