• May 18 2024

40 வயதிலும் நரேனுடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்…எப்படி போஸ் கொடுத்திருக்காங்க பாருங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவரே நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் பல கதாபாத்திரங்களில் ஒரு காலத்தில் சினிமாவையே கலக்கி இருந்தார். அதாவது குடும்பப் பெண்ணாகவும், காதல் நாயகியாகவும், கவர்ச்சிக் கன்னியாகவும் பல நிலைகளிலும் பல ரசிகர்களின் மனதில் இன்றுவரை இடம்பிடித்து நிற்கின்றார்.

'பரட்டை என்கிற அழகு சுந்தரம்', 'திருமகன்', 'கஸ்தூரி மான்', 'மெர்க்குரிப் பூக்கள்', 'சண்டக்கோழி' உள்ளிட்ட மனதை விட்டு அகலாத பல படங்களில் நடித்திருக்கின்றார். இப்படங்களில் இவர் நடிகர் விஷாலுடன் 'சண்டைக்கோழி' படத்தில் குறும்பானா நாயகியாக வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தமை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. இதனைத் தொடர்ந்து மாதவன் நடிப்பில் வெளியான 'ரன்' படத்திலும் வெகுளியான சேட்டை மிகுந்த பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார்.

தமிழில் மட்டுமன்றி மலையாள சினிமாவிலும் பிஸியாக இருந்த இவர் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார். அதாவது 2014 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கையோடு சினிமா துறையில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நகைக்கடையில் மீரா ஜாஸ்மினை கண்ட ரசிகர்கள் அவருடைய போட்டோக்களை வைரல் ஆக்கினர். அதில் நடிகை மீரா ஜாஸ்மின் மிகவும் உடல் எடை கூடி அடையாளமே தெரியாமல் மாறிப் போய் இருந்தார்.

இதனைத் தொடர்ந்து சில காலத்தின் பின்னர் திடீரென சமூக ஊடகங்களுக்கு என்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்ய ஆரம்பித்தார். இந்த புகைப்படங்களில் பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு ஒல்லி பெல்லியாக காட்சி அளித்த மீரா ஜாஸ்மின், நாட்கள் செல்ல செல்ல அவர்களை போலவே தனது கவர்ச்சியையும் மேலும் மெருகேற்றினார்.

இவர் தமிழில் இறுதியாக 2014-ஆம் ஆண்டு விஞ்ஞானி என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் படங்களுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ள மீரா ஜாஸ்மின் தற்போது 'மகள்' என்ற மலையாள படத்தில் மீண்டும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவ்வாறாக மீண்டும் சினிமா உலகில் தலை காட்டி இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது நடிகர் நரேனுடன் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றார். அப்பார்ட்டியில் கொடுத்துள்ள இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

அத்தோடு இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் "இந்த போஸுடன் மீண்டும் இணைவது உங்கள் பாதையை ஒளிரச் செய்யும். அரவணைப்பு மற்றும் மென்மையை மீண்டும் அனுபவிக்க வைக்கிறது, அந்த பொக்கிஷமான நிகழ்வுகள் மீண்டும் எழும்பியதற்கு நன்றி அன்பே நரேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement