• May 18 2024

"ஹன்சிகா கிட்ட தான் சொல்ல வேண்டிய லவ்வை என்னை சொல்ல சொன்னாரு"...பிரபல நடிகரை கலாய்த்த சந்தானம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுள் ஒருவராகக் கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் சந்தானம். குறும்புத்தனம் நிறைந்த இவரின் நகைச்சுவையையும், நடிப்பினையும் ரசிப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. சினிமாவில் காமெடி நடிகனாக தனது பயணத்தை தொடங்கியவர் தனது திறமையினால் இன்று கதாநாயகனாக வளர்ந்து நிற்கின்றார்.

இந்த நிலையில் இவர் தற்போது 'குலுகுலு' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை 'மேயாத மான்' என்ற படத்தினை இயக்கிப் புகழ் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தினை சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயிண்ட்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரித்திருக்கின்றார். சமீபத்தில் இப்படத்தினுடைய டீசர் வெளியாகி பலரதும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்றைய தினம் இந்தப் படத்தினுடைய திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் ஆகியோர் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர். அதில் கலந்து கொண்டு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். இதில் நடிகர் சந்தானம் உதயநிதி பற்றிக் கூறிய கருத்தானது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

அதாவது அவர் கூறுகையில் "இந்தப் படத்தினை பார்த்து விட்டு உதயநிதி எமக்கு கொடுத்த பரிந்துரைகள் ஒரு இயக்குநருக்கான பார்வையில் இருந்தது. அதுமட்டுமன்றி இந்தப் படத்தினை வெளியிடுவதற்கும் இவரே பெரும் உதவியாய் இருந்தார்" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் அவர் உதயநிதி பற்றிக் கூறுகையில் "உதயநிதியோட உண்மையான முகத்தையே நான் பிரச்சாரத்தில் தான் பாத்திருக்கேன், அப்போ இவ்வளவு நாளா சினிமாவில நம்ம கிட்ட பேசத் தெரியாத மாதிரி நடிச்சிருக்காரு என்று நான் முதலில நினைச்சிருக்கேன்" என சிரிச்சுக்கிட்டே கூறியிருந்தார்.

அத்தோடு தங்களது பழைய படங்களின் அனுபவம் பற்றியும் கூறியிருக்கார் நடிகர் சந்தானம். அதாவது "ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மாதிரியே உதயநிதி ஒரு கல்லை வச்சு ஒரு கண்ணாடியே பண்ணிட்டாரு, எனக்கும் உதயநிதிக்கும் இருக்கிற நட்பினாலேயே ஒவ்வொரு நாளும் காலையில ஒரு 50 பேர் ஆவது மனு வைச்சிட்டு இருக்காங்க" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் "ஓகே ஓகே படத்தில் கூட ஹன்சிகா கிட்ட லவ் சொல்லுகின்ற சீனையும் என்னையே சொல்ல சொல்லி உதயநிதி சொல்லியிருக்காரு. அதற்கு நான் உடனே நீங்க தானே ஹீரோ நான் காமெடியன் நீங்க சொல்லுங்க" என்று சொன்னதாகவும் சிரிச்சுக்கிட்டே கூறியிருக்காரு.

இவ்வாறாக படங்களில் வாற சீனைக் கூடப் பேசப் பயப்பிட்டவரு இன்னைக்கு என்னம்மா அரசியல் பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காரு பாருங்க எனவும் கூறி உதயநிதியை கலாய்த்திருக்கின்றார் நம்ம சந்தானம். சந்தானத்தின் இந்த நகைச்சுவை நிறைந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement