• May 18 2024

ஒரு வயதில் குழந்தையுள்ள நிலையில் திடீரென இறந்த பிரபல நடிகர்- திரையுலகினர் அதிர்ச்சி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இந்தி நடிகர் தீபேஷ் பன் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியில் மிகவும் பிரபலமான காமெடி கா கிங் கான், பூட்வாலா, காமெடி கிளப், எப்ஐஆர், சன் யார் சில் மார் மற்றும் சேம்ப் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றவர் தீபேஷ் பன். இவரை மிகவும் பேமஸ் ஆக்கியது பாபிஜி கர் பர் ஹெயின் என்ற தொடர் தான். இதில் மால்கன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தீபேஷ்.

மேலும் மும்பையில் வசித்து வந்த நேற்று காலை தனது குடியிருப்பு அமைந்துள்ள தாஹிர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தீபேஷ் பன் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அவருக்கு தற்போது 41 வயது ஆகிறது. மறைந்த நடிகர் தீபேஷுக்கு மனைவி மற்றும் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தீபேஷ் கிரிக்கெட் விளையாட வருவதற்கு முன் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு 41 வயதில் நடிகர் தீபேஷ் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அறிந்து பாலிவுட் வட்டாரமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நடிகர் தீபேஷின் மறைவுக்கு ஏராளமான சின்னத்திரை மற்றும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement