• May 19 2024

உயிருக்குப் போராடும் கிருஷ்ணவேணி... ராஜேஸ்வரிக்கு தெரிய வந்த உண்மை... கண்ணீர் வடிக்கும் வானதி... 'பேரன்பு' இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிய வண்ணம் இருக்கின்றன. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'பேரன்பு'. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

அதில் கிருஷ்ணவேணிக்கு ஆக்சிடன் ஆகி விட்டது என வானதிக்குத் தெரிய வருகின்றது. விபத்தில் சிக்கிய கிருஷ்ணவேணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். அங்கு சென்ற வானதி "அம்மா" எனக் கூறி அழுது கண்ணீர் வடிக்கின்றார். 


பின்னர் ராஜேஸ்வரி ஹாஸ்பிட்டலுக்கு கால் பண்ணி கிருஷ்ணவேணி எப்படி இருக்கின்றார் எனக் கேட்கின்றார். அதற்கு அவர்கள் கிருஷ்ணவேணியின் மகள் வந்திருப்பதாகவும் அதனால் ஒண்ணும் பிரச்சினை இல்லை எனவும் கூறுகின்றனர்.

மகள் யார் எனப் பார்ப்பதற்காக ஹாஸ்பிட்டலுக்கு விரைகின்றார் ராஜேஸ்வரி. அங்கு சென்றதும் வானதி தான் கிருஷ்ணவேணியின் மகள் என ராஜேஸ்வரிக்கு தெரிந்து விடுகின்றது. இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement