• May 20 2024

விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விக்ரம்... ஓஹோ காரணம் இதுதானா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகராக இருப்பவர் சீயான் விக்ரம். இவர் நடிகர் மட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் குரல் நடிகர் எனப் பன்முகத்திறமை கொண்ட கலைஞராகவும் விளங்கி வருகின்றார். இவர் நடிப்பில் உருவான 'சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், பிதாமகன், சாமி' உள்ளிட்ட பல படங்களை இன்றும் நம்மால் மறக்க முடியாது.



இந்நிலையில் இவரின் நடிப்பில் உருவாகி எதிர்வரும் ஆகஸ்ட் 31-ஆம் திகதி வெளியாகவுள்ள திரைப்படம் 'கோப்ரா'. இப்படத்தினை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கின்றார். இதில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'கே ஜி எஃப்' பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடித்திருக்கின்றார். 


மேலும் இவர்களுடன் ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், பத்மபிரியா, கனிகா, மிரிணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். அத்தோடு முக்கிய வேடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். 



மேலும் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு 'இசைப்புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். சுப்பர் நேச்சுரல் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். அத்தோடு ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.


இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக நேற்றைய தினம் 'கோப்ரா' படக்குழுவினர் ட்விட்டரில் கலந்து கொண்டு உரையாடினார்கள். அப்போது விஜய்யின் ரசிகர்களை பற்றி புகழ்ந்து பேசியிருக்கின்றார் நடிகர் சீயான் விக்ரம். அதாவது "விஜய்யின் ரசிகர்கள் அதிகமாக எனக்கு ஆதரவு தருகிறார்கள்" என்று கூறி இருக்கின்றார். அதுமட்டுல்லாது அவர்களுக்கு தன்னுடைய நன்றியையும் ஸ்பெஷலாக தெரிவித்திருந்தார் நம்ம சீயான் விக்ரம். 

Advertisement

Advertisement