• May 20 2024

மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்ட விஜய் சேதுபதி…சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் நடிகர்களில் முக்கியமானவர் விஜய்சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டும் இல்லாது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பட்டையைக் கிளப்பி வருகின்றார்.

இருப்பினும் சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் சமீபத்தில வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிபெற்றுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்த இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகின்றது.

மேலும் கட்டாய வெற்றியை எதிர்பார்த்திருந்த விஜய் சேதுபதிக்கு இப்படம் கைகொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் சமீபத்தில வெளியான ஒரு தகவலால் விஜய் சேதுபதி ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர். என்னவென்றால் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய் சேதுபதி தவறவிட்டாராம்.

இயக்குநர் மணி ரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் மிகப்பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் கார்த்திக்கு பதில் முதலில் விஜய் சேதுபதிதான் நடிக்கவிருந்தாராம். ஆனால் அப்போது அவர் வேறு சில படங்களில் கமிட்டானதால் அவரால் நடிக்க முடியாமல் போனதாம். மேலும் இத்தகவலை கேள்விப்பட்ட விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இப்படி ஒரு வாய்ப்பை தவறவிட்டுட்டாரே என வருத்தத்தில் உள்ளார்களாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement