• Sep 20 2024

இப்படியான படத்தில் நடிக்கவே மாட்டேன்- உறுதியாக கூறிய விஜய்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் ஒருசில படங்கள் மூலம் தனக்கென இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா.இவர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடித்திருக்கும் லைகர் படம் ஆகஸ்ட் 25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. 

அத்தோடு லைகர் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறார்கள். லைகரை விளம்பரம் செய்ய செல்லும் இடமெல்லாம் விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் கூடிவிடுகின்றது.

லைகர் படத்தில் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்டிஸ்டாக நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இந்நிலையில் லைகரை ரவி தேஜாவின் Amma Nanna O Tamila Ammayi படத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள்.மேலும் இது குறித்து பேட்டி ஒன்றில் விஜய் கூறியதாவது, என் படமும், ரவி தேஜா படமும் வித்தியாசமானது. இரண்டுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. மேலும் எனக்கு ரீமேக்குகள் பிடிக்காது என்றார்.

Amma Nanna O Tamil Ammayi படம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் லைகர் வித்தியாசமான படம்.அத்தோடு  மிக்சட் மார்ஷியல் ஆர்ட்ஸும், பாக்ஸிங்கும் ஒன்றல்ல. இந்த படத்தில் அம்மா, மகன் இடையேயான பாசம் தான் ஹைலைட்டே. மேலும் பல விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. நான் ரீமேக்குகளில் ஒருபோதும் நடிக்க மாட்டேன். எனக்கு ரீமேக்குகள் பிடிக்காது என்கிறார் விஜய் தேவரகொண்டா.

அத்தோடு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான Amma Nanna O Tamila Ammayi ஸ்போர்ட்ஸ் டிராமா படம் போன்று லைகர் இருப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது. இரண்டு படங்களிலுமே ஹீரோவுக்கும், அம்மாவுக்கும் இடையேயான பாசத்தை கொண்டாடுகிறார்கள். அதனால் தான் ரவி தேஜா படம் போன்று தான் விஜய் படம் என்று கூறுகிறார்கள்.

Advertisement

Advertisement