• Apr 26 2024

போராடி பிக் பாஸ் வீட்டில் விக்ரமனுக்கு கிடைத்த வெற்றி-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பமாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.

இது வரை எந்த சீசனில் இல்லாத வகையில் இந்த சீசனில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் விக்ரமன் பங்கேற்று உள்ளார்.


பிக் பாஸ் வீட்டில் கனா காணும் காலங்கள் டாஸ்க் நடைபெற்று வருகிறதற்காக போட்டியாளர்கள் இரண்டு டீமாக பிரிந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக இருந்தனர். இதில், அசீம், தனலட்சுமிக்கு லவ் லெட்டர் கொடுத்ததும், அவரை துரத்தி துரத்தி வம்பு இழுத்ததும் ரசிக்கும்படி இருந்தது. மேலும் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளராக அசீம் இருப்பார் என்று ரசிகர்கள் இப்போதே யூகித்து வைத்துவிட்டனர். இதையடுத்து, நேற்றில் இருந்து 80ஸ் கல்லூரியாக பிக் பாஸ் வீடு மாறியுள்ளது.

அத்தோடு பிக் பாஸ் வீட்டில் கடித டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரை நினைத்து கண்ணீர் மல்க பேசினார்கள். ஆனால், விக்ரமன் சட்டமேதை அம்பேத்கரை நினைத்து உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அனைத்து போட்டியாளர்கள் கடிதம் வாசித்தது 24 மணி நேரலையிலும், விஜய் டிவியிலும் ஒளிபரப்பான நிலையில், விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி படித்தது 24 மணி நேர ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகவில்லை.


இதனால் சமூகவலைத்தளத்தில் பெரும் புயலை கிளப்பியது. அனைவருக்கும் வழங்கப்பட்ட வாய்ப்பு விக்ரமனுக்கு மட்டும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? என கேள்வியை நெட்டிசன்கள் இணையத்தில் கேட்டனர். இணையத்தில் கண்டனங்கள் வலுத்ததால், நேற்று விஜய் டிவியில் விக்ரமன் அம்பேத்கருக்கு கடிதம் எழுதி வாசித்ததை ஒளிபரப்பியது.

இதனால் , மகிழ்ச்சியடைந்த ஒரு நெட்டிசன்ஸ், இறுதியாக வெற்றி பெற்று விட்டோம், அம்பேத்கர் பற்றி விக்ரமன் எழுதிய அன்பு கடிதம் 1மணி நேரம் நிகழ்வில் காட்டப்பட்டது உள்ளது .24 மணி நேர நிகழ்வில் தவிர்க்க நினைத்ததை 1 மணி நேரத்தில் வரவைத்து ஜனநாயகத்தின் வெற்றி என்றும், எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கு என்றும், போராட்டம் நமக்கு புதுசில்லையே ஜெய் பீம் என்றும் பலர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement