• Apr 25 2024

என் பொண்ணு கேட்ட பாத்ரூமை கூட கட்டித்தர வக்கில்ல- மாப்பிள்ளையை பாடாய் படுத்திறாங்க- மீனாவின் அப்பா கொடுத்த அதிரடியான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சமீபகாலமாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது.ஜீவா & மீனா ஆகியோர் திருமணத்தில் நடந்த மொய் விவகாரத்தால் மனஸ்தாபமாகி வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். அது மட்டுமில்லாமல், மீனாவின் தந்தை வீட்டிலும் அவர்கள் இருவரும் குடியேறி உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து  தனது கணவர் கண்ணனை அனைவரும் குற்றம் சுமத்தியதாக அவரது மனைவி ஐஸ்வர்யா சக குடும்பத்தினரிடம் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து கிளம்பி விட்டார். இவருடன் கண்ணனும் கிளம்பிப் போய் விட்டார்.


 தனது மகள் மற்றும் மருமகன் ஆகியோரின் நலனை மட்டுமே பெரிதாக எடுத்துக் கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பொருட்டாக எடுக்காத மீனாவின் தந்தையாக ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் ஜனார்த்தனன்.

இவர் சமீபத்தில் பிரபல சேனலில் பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வரும் கதாபாத்திரம் போலவே பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.


"பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எனக்கு ஒன்னும் பண்ணல. எதுவும் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை. ஆனா என் பொண்ணு, மாப்பிள்ளை, பேத்தி, சந்தோசமா, சவுகரியமா, சுகமா வாழனும். அது என்னோட கொள்கை. அதுனால மாப்பிள்ளையோட தம்பிங்க, தம்பி பொண்டாட்டிங்க எல்லாரும் நல்லா இருக்கணும்ன்னு நெனைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் புறாக்கூண்டு மாதிரி ஒரு கடை. அதுல வர்ற சொற்ப வருமானத்தை வெச்சுகிட்டு மாப்பிள்ளையை பாடா.படுத்துறாய்ங்க. அவங்களுக்கு போதுமான அளவுக்கு பணம் குடுக்கமாட்டேங்குறாங்க. மரியாதையை கொடுக்கல. என்கிட்ட கோடி கோடியா சொத்து இருக்கு. வாய்யா வந்து அனுபவிச்சுக்கய்யான்னு சொல்றேன்.


நாலு பேரு ஒன்னா பொறந்தோம். அதுல ஒருத்தனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குதுன்னா அதை விட்டு கொடுக்குற மனப்பக்குவம் அவங்களுக்கு வரணும். அது அவங்களுக்கு இல்லை" என பேசிய ஜனார்த்தனன், தனது மகளுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை குறித்து பேசுகையில், "என் மகளுக்கு ஒரு டாய்லெட் கட்டித் தரல. 3 வருஷ போராட்டம். என் பொண்ணு என்ன கேட்டுச்சு, ஒரு Attached பாத்ரூம் கேட்டுச்சு. அது செஞ்சு குடுக்க வக்கில்லைன்னா அந்த குடும்பத்தில் இருந்து என்ன பலன்" என பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை சுற்றியே நிறைய விஷயங்களை அவர் ஜாலியாக பகிர்ந்து கொண்டார்.இது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement