• Mar 28 2024

ரஜினிசேர் மாதிரி பண்றேன் என்றால் ஓகே ஆனால் விஜய் சேர் மாதிரி பண்ணல- சிவகார்த்திகேயன் பளிச் பேட்டி!

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள மாவீரன் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் அண்மையில் கலந்து கொண்ட பேட்டியொன்றில்இனிமே மான் கராத்தேலாம் பண்ண முடியாது. ஸ்ட்ரெய்ட்டா கராத்தே தான் என்றார். 

சினிமாவில் சிவகார்த்திகேயன் அதிகமாக ரஜினி சாயலில் நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன். சினிமாவுக்கு வரும் முன்னர், 1000 மேடைகளுக்கு மேல் ரஜினி சார் போல மிமிக்ரி செய்து தான் வளர்ந்தேன். அவரது சாயல் இருப்பதாக சொன்னால் நிச்சயம் சந்தோஷம் தான் என்றார்.


ரஜினி சாயலில் இருப்பதாக சொன்னாலும், உங்க கிட்ட விஜய் சாயல் இருக்கே என சில செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மற்ற நடிகர்கள் போலவும் என் நடிப்பில் சாயல்கள் தெரியலாம். ஆனால், எனக்கு அது சரியாக தெரியவில்லை. ஆனால், சூப்பர் ஸ்டார் போல நான் பண்றேன் என சொல்றது உண்மை தான். ஆனால், அதனை பிளான் பண்ணியெல்லாம் பண்ணல, அது அப்படியே இயல்பாவே வந்துடுது என பேசி உள்ளார் சிவகார்த்திகேயன்.


இசை வெளியீட்டு விழாவில் அஜித் சார் சொல்வது போல என பேசி கைதட்டல்களை அள்ளிய சிவகார்த்திகேயன். ரஜினிகாந்த் சாயல் கமெண்ட்டுக்கும் ஆமாம் என ஆமோதித்தார். ஆனால், விஜய் போல பண்றீங்களேன்னு கேட்டதற்கு நைஸாக அங்கிருந்து டாப்பிக்கை மாற்றி சிவகார்த்திகேயன் பேசிய நிலையில், விஜய்யை சிவகார்த்திகேயன் தெளிவாக அவாய்டு பண்ணுகிறார் பாருங்க என ரஜினிகாந்த் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் சண்டையை ஆரம்பித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement