• May 19 2024

யாரையும் அண்டி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை - கோபிக்கு விவாகரத்து கொடுத்த பாக்யா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் விறுவிறுப்பாகவும் வித்தியாசமான கோணத்திலும் ஓடிக் கொண்டிருக்கும் முக்கிய சீரியல் தான் பாக்கியலட்சுமி. இத்தனை காலமாக தனது கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்ந்து வந்த பாக்யா தற்பொழுது கணவனுக்கு எதிராக திரும்பியுள்ளார்.

அவர் தனக்கெதிராக செய்த குற்றங்களை அறிந்த பாக்யா தற்பொழுது துணிச்சலுடன் போராடி வருகின்றார். இதனால் இனி கோபி எது சொல்லியும் அவரை ஏமாற்ற முடியாத அளவுக்கு மாறிவிட்டார். அப்பாவியாக இருந்த பாக்யா தற்போது அப்படியே அப்போசிட் ஆக மாறிவிட்டார்.

நீதிமன்றத்திற்கு செல்வதற்காக வந்த நோட்டீஸ் படி பாக்யா கோர்ட்டுக்கு செல்ல கிளம்புகிறார்.நீதிமன்றத்தில் பாக்யா என்ன பதில் சொல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் விவாகரத்துக்கு ஒப்புக்கொள்வதாக கூறி ஷாக்கொடுக்கிறார்.

யாரையும் அண்டி பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி கோபிக்கு நோஸ்கட் கொடுக்கிறார்.பாக்கியாவின் இந்த துணிச்சலான முடிவுக்கு எழிலும் துணை நிற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ப்ரோமோ இதோ

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement