• Sep 20 2024

வீட்டுக்கு வந்த கோபிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி – பாக்கியாவா இது…? இன்றைய எபிசோடு அப்டேட்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்த சிரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பது பார்ப்போம்….

பாக்கியா மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்க ஜெனி மற்றும் செல்வி இருவரும் என்ன அன்ரி இப்படியே நின்று கொண்டு இருக்குறீங்க என கேட்கின்றனர்.பாக்கியாவை அழைக்க நீங்க என்ன தனியா விட்டுட்டு போங்க என பாக்கியா சொல்ல ஜெனி கீழே சென்று விடுகிறார். செல்வி அங்கேயே நிற்க பாக்கியா அவரை திட்டி அனுப்புகிறார்.

மேலும் இந்தப் பக்கம் கோபி மருத்துவமனையில் இருக்க எழில் அவரையே பார்த்துக் கொண்டிருக்க இதை பார்த்து கோபி இவன் எதுக்கு இப்படி முறைச்சிகிட்டு நிற்கிறான் என குழம்பி போகிறார்.

மறுநாள் காலை வரை பாக்கியா மொட்டை மாடியில் அப்படியே நின்று கொண்டிருக்க காலையில் எழுந்ததும் ஜெனி மற்றும் வெள்ளி இருவரும் மேலே சென்று போய் பார்க்கின்றனர்.

இருவரும் கீழ வாங்க என கூப்பிட அவர் வந்துட்டாரா என கேட்கிறார். ஓம் என கூற ..இதற்கு தான் காத்துக்கொண்டு இருக்கிறேன் எனக் கூறிவிட்டு கீழே இறங்கி வருகின்றார். அந்த நேரத்தில் சரியாக கோபியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் வருகின்றனர்.அவரை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வருகின்றனர். கோபி உள்ளே வந்ததும் அவரை நிற்க வைத்து பாக்யா கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

அதற்கு முன்னதாக குடும்பத்தார் எல்லோரும் நீ எதுக்கு ஹாஸ்பிடலில் இருந்து நாங்க வருவதற்கு முன்னாடி வீட்டுக்கு வந்த? நீ போகும் போது எங்களுக்கு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல என கேட்கின்றனர். ஸ்கேன் எடுக்க பணம் நீதானம்மா கட்டின என கேட்க பாக்கியலட்சுமி என்று சொன்னாங்களா என பாக்யா கேட்கிறார்.

அவருடைய மனைவி நீ தானே என சொல்ல பாக்கியலட்சுமி சொன்னாங்களா என மீண்டும் கேட்க அனைவரும் எதுவும் புரியாமல் அதிர்ச்சியாக நிற்கின்றனர்.இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement