• May 20 2024

ஏமாந்த குணசேகரன்... அப்பத்தா ரூமில் கதறி அழும் ஜனனி... அதிர்ச்சியில் மொத்தக் குடும்பம்... பரபரப்பின் உச்சத்தில் 'எதிர்நீச்சல்' எபிசோட்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நடந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் நந்தினி குணசேகரனுக்கு கல்வெட்டு வைப்பது பற்றி பேசி சிரித்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது தர்ஷன் வந்து ஈஸ்வரியிடம் "நான் எனது நண்பன் வீட்டுக்கு போய் வருகிறேன்" எனக் கூறுகின்றான். அதற்கு தர்ஷினி "நீ ஆம்பள பையன் ஏன் பர்மிஷன் எல்லாம் கேக்குற, போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே, அப்பா காலையில அவ்வளவு பேசும்போது நீ வேடிக்கை தானே பாத்துகிட்டு இருந்த" என தர்சனை அதட்டிப் பேசுகின்றாள்.

பதிலுக்கு தர்ஷன் "நான் மட்டும் பேசி இருந்தா நிலைமை இன்னும் மோசமாக போயிருக்கும். அம்மா சொல்ற மாதிரி, அவர்கிட்ட இருக்குற நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான். அவர் இந்த சொசைட்டில  செல்வாக்கு உள்ள ஆள்தான், ஆனா நம்மளோட அம்மா தான் நம்முடைய பெருமை, இத்தனை நாள் இது எனக்கு புரியல. அம்மா என்னோட காலேஜ் வந்ததுக்கு அப்புறம்தான் புரிந்தது" என ஈஸ்வரி பற்றிக் கூறித் தர்ஷன் பெருமைப்படுகின்றான்.


இதனைக் கேட்டதும் ஜனனி தர்ஷனை பாராட்டுகிறாள். அதாவது "இதுதான் உண்மையான மாற்றம். அவங்கள போல எல்லா விஷயத்துக்கும் கத்தக்கூடாது. எங்க பேசணுமோ அங்க பேசுறது எவ்வளவு முக்கியமோ அதேபோல சில இடத்துல பேசாம இருக்குறதும் நல்லது தான்" என்கிறாள். மேலும் நமக்கு எப்படி நம்மளோட அம்மாக்கள் சப்போர்ட்டாக இருக்குறாங்களோ அதே போல நாமளும் நம்ம அம்மாக்களுக்கு சப்போர்ட்டாக இருக்கணும் என அனைத்து குழந்தைகளும் அவர்களின் ஆதரவை தெரிவிக்க அனைவரும் பூரிக்கிறார்கள். 

இதனையடுத்து ரேணுகா உடனே "வாங்க எல்லாருக்கும் சுத்தி போடுகிறேன்" என திருஷ்டி கழிக்கிறாள். அத்தோடு "இனிமே எல்லாமே நல்லதுதான் நடக்கும்" எனவும் கூறுகின்றார். மறுபுறம் குணசேகரன் இன்னைக்கு ஷேர் பத்தின ரிசல்ட் வரப்போகிறது என்பதால் மிகவும் டென்ஷனாக இருக்கிறார். 

அந்த சமயத்தில் கரிகாலன் குணசேகரனிடம் வந்து "என்னையும் ஆதிரையும் எங்களோட வீட்டுக்கு அனுப்பி வைச்சுருங்க" என சொல்கிறான். இதனைத் தொடர்ந்து கதிர் ஆதிரையை அழைக்க கேட்காதது போலவே அனைவரும் இருக்கிறார்கள். கீழே இறங்கி வந்து ஆதிரையை தரதரவென இழுத்து வருகிறான். பின்னர் ஆதிரை கரிகாலனிடம் கொஞ்சி பேசுவது போல நடிக்கிறாள். அதற்கு கரிகாலன் "இங்க எல்லார் முன்னாடியும்  ஆசையா கரிகாலன்னு கூப்பிடுவ ரூமுக்குள்ள போன உடனே மூஞ்சுல கரியைப்யை பூசுவ" என்கிறான்.

மேலும் ஞானம் கரிகாலனை பார்த்து சத்தம் போட "மாமா உங்க பொண்டாட்டி அவங்களோட பழைய காதலன் கிட்ட உங்கள கூட்டிப்போக சொன்னா என்ன பண்ணுவீங்க. அருணை பார்க்கணும் என்னை கூட்டிட்டு போன்னு நேத்து சொல்றா" என்கிறான் கரிகாலன். கதிர் ஆதிரையை இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளி மரியாதையா உன்னோட மாமியார் வீட்டுக்கு போய் வாழற வழி பாரு என்கிறான். 


அந்த சமயத்தில் பரபரப்பாக ஆடிட்டர் வந்து மொத்த சொத்தும் போச்சு என குணசேகரனிடம் சொல்கிறார். ஒன்றும் புரியாமல் குணசேகரன் சொல்ல வந்தத ஒழுங்கா சொல்லுங்க என்கிறார். "உங்களோட மெடிக்கல் எக்விப்மென்ட் கம்பெனியில் யார் யாரோ நுழைந்து உங்களின் ஸ்டாஃப்களை வெளியே அனுப்பி விட்டார்கள்" என்கிறார். அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 

பின்னர் குணசேகரன் "கவர்மெண்ட் சீல் வைச்சுடுச்சா" என கேட்கிறார். இல்லை ஜீவானந்தம் என்ற ஒருவர் வந்து இது இனிமே என்னுடைய ஆபிஸ் என்கிறான் என சொல்கிறார் ஆடிட்டர். யார் இந்த ஜீவனானந்தம் இந்த பெயரை கேள்விப்பட்டதே இல்லையே என புலம்பிக்கொண்டே அவர்கள் அனைவரும் காரில் ஏறி வேகவேகமாக அங்கிருந்து செல்கிறார்கள். 

இந்நிலையில் ஜீவானந்தம் பெயரை கேட்ட ஜனனியும், சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். வேகவேகமாக ஜனனி அப்பத்தாவின் ரூமுக்கு  சென்று "எந்திரிங்க அப்பத்தா. யாரு அந்த ஜீவானந்தம். உங்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?? அவன் ஏன் நம்ம சொத்த ஆக்ரமிக்கணும்?? நீங்க ஏன் அந்த பெயரை என்கிட்டே சொன்னீங்க. சொல்லுங்க சொல்லுங்க" என கேட்டு கேட்டு அழுகிறாள். அனைவரும் அவளை வெளியே அழைத்து வருகிறார்கள். 

பின்னர் "அப்பத்தாவுக்கும், ஜீவானந்தத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னோட புருஷன்தான் டிராமா போடுறார். ஜீவானந்தம் என்பவன் மூலம் சொத்து அனைத்தையும்  அபகரிக்க பிளான் போட்டு இதை செய்துள்ளார். அதனால் தான் நாம ஜீவானந்தம் நம்பருக்கு எத்தனை முறை முயற்சி செய்தும் அவன் எடுத்து பேசவில்லை. இது எல்லாமே அவரோட பிளான்" என ஈஸ்வரி ஜனனியிடம் சொல்கிறாள்.  இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement