• Apr 30 2024

"கதையை விட்டிட்டு முதலில சம்பளத்தை சொல்லுங்கப்பா"… நம்ம யோகி பாபுவா இப்படி..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பல தடைகள், ஏற்ற இறக்கங்கள், அவமானங்கள் என அனைத்து விதமான சோதனைகளையும் கடந்து வந்து இன்று சிறந்த நகைச்சுவையாளர்களில் ஒருவர் என்றளவிற்குப் பிரபலமாகி இருப்பவரே நடிகர் யோகி பாபு.

இவரது ஆரம்பப் பயணம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து தான் தொடங்கியது. அதாவது இதில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' என்ற நிகழ்ச்சியின் வாயிலாகவே மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து பல போராட்டங்களுக்குப் பின்னர் அமீர் நடித்த 'யோகி' என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திலிருந்து தான் இவர் பாபு என்ற பெயரை யோகி பாபு என மாற்றிக் கொண்டார். இதனைத் தொடர்ந்து 'பையா, வேலாயுதம், கலகலப்பு' போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இவ்வாறாக பல படங்களில் நடித்து வந்த இவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது 'மான் கராத்தே' என்ற படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரமே. இதில் இவரது நடிப்பு பலராலும் கவரப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பல பட வாய்ப்புக்களும் இவரை வந்தடையத் தொடங்கின.

நகைச்சுவை நடிகனாக கொடி கட்டிப் பறந்து வந்த இவர் தற்போது நாயகனாக மாறி வலம் வருகின்றார். அதுமட்டுமன்றி முன்னணி நகைச்சுவை நடிகர்களுக்கு டாப் கொடுக்கும் வகையில் பல படங்களிலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வருகின்றார்.

சமீபகாலமாக தமிழில் வெளியாகி வருகின்ற பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையினால் ஒவ்வொரு படத்திலும் அசத்தி வருகின்றார்.

குறிப்பாக அவர் நடித்த 'தர்மபிரபு' மற்றும் 'மண்டேலா' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான வரவேற்பினையும், வெற்றியினையும் அடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதையடுத்து இவருக்குத் தொடர்ந்தும் பட வாய்ப்புக்கள் வந்து குவிந்த வண்ணமே இருக்கின்றன. அதுமட்டுமன்றி அவரை வைத்து சிறு பட்ஜெட்டில் படமெடுக்க பிரபல தயாரிப்பாளர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் நம்ம யோகி பாபு இதற்கு இடம் கொடுப்பாரா..?

அவர் தன்னை இப்படி குறைந்த பட்ஜெட்டில் அணுக வரும் தயாரிப்பாளர்களிடம் கதை பற்றி எதுவும் பேசாமல் முதலில சம்பளத்தை பற்றி சொல்லுங்க என்று கேட்கிறாராம். அதுமட்டுமன்றி சம்பளம் என்று ஒரு பெரிய தொகையை சொல்லி தயாரிப்பாளர்கள் பலரை இவர் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறாராம். இதனை கேள்விப்பட்ட நம்ம யோகி பாபு ரசிகர்கள் "நம்ம தலைவரும் இப்பிடி பணத்திற்கு ஆசைப்படத் தொடங்கி விட்டாரா?" என வாயை பிளந்து வருகின்றார்களாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement