• May 21 2024

சூப்பர் சிங்கர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா..? வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என இரண்டு வகை நிகழ்ச்சிகளையும் சேர்த்து ஒரு 20 சீசன்கள் கூட வந்திருக்கும் என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.அந்த அளவிற்கு இந்நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கூட வரவேற்பு குறையாமல் படு ஹிட்டாக ஓடுகிறது.

மேலும் இந் நிகழ்ச்சி குழுவினரும் மக்களை அதிகம் பார்க்க வைக்க நிறைய வித்தியாசமான புதுபுது விஷயங்களை புகுத்துகிறார்கள்.

அண்மையில் நடந்த ஜுனியர்களுக்கான நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது, வெற்றியாளர் கிருஷாங் அறிவிக்கப்பட்டுவிட்டார்.அவருக்கு 60 இலட்சம் மதிப்புள்ள வீடும் பரிசளிக்கப்பட்டது.

இவ்வாறு இருக்கையில் சூப்பர் சிங்கர் கடந்த பல சீசன்களை மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இவர்களை தாண்டி இந்நிகழ்ச்சியை யாராலும் அருமையாக கொண்டு செல்ல முடியாதென்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது.

இவர்கள் இருவருக்கும் இந்நிகழ்ச்சியின் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க மட்டும் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement