• Apr 18 2024

பாலியல் தொழில் செய்ய சொல்லி மிரட்டல்- துணை நடிகை விடுத்த பரபரப்பு புகார்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா துறையை பொறுத்த வரையில் நடிகைகளை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போன்ற விவகாரங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது. இதனால் பல நடிகர்கள், இயக்குநர்கள் சிறைக்கு செல்வது வாடிக்கையான ஒன்றாக அமைந்துள்ளது.

அந்த வகையில் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 20 வயதான துணை நடிகை ஒருவர் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து சிலர் மிரட்டல் விடுப்பதாக சென்னை காவல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இவர் நிக்கிதா பாக்கியராஜ் இயக்கியகத்தில் வெளியான உலக சாதனை, 369, அகத்தியன் குறும்படம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.மற்றும் இவர் சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது தோழி மூலம் அறிமுகமான சினேகா, பிரகாஷ்,ரியா, நந்தினி ஆகிய 4 பேரும் தன்னை பாலியல் தொழிலுக்கு அழைத்து மிரட்டி உள்ளதாக புகாரில் கூறியுள்ளார்..

இந்நிலையில், தனகக்கு உரிய பாதுகாப்பு வழங்கி தன்னை மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement