• May 01 2024

நிஜ வாழ்க்கையில் காரில் கடத்தப்பட்ட நமீதா… போலீசாரிடம் சிக்கிய நபர்; நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இளஞர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்தவர் நடிகை நமீதா. கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'எங்கள் அண்ணா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஓரிரு படங்களில் சிம்பிளான கேரக்டர்களில் நடித்து வந்தார்.

அத்தோடு முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சரத்குமார், சத்தியராஜ், விஜயகாந்த் ஆகியோரின் படங்களிலும் நடித்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து இவர் முற்று முழுதாகவே கவர்ச்சிக் களத்தில் இறங்கி கவர்ச்சிக் கன்னியாகவே மாறிவிட்டார். அதுமட்டுமல்லாது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் கலந்து கொண்டிருக்கின்றார்.

இவரின் கவர்ச்சியான நடிப்பிற்கு என்றே இவரை சுற்றி எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருந்த வண்ணமே இருக்கும். இந்த நிலையில் சினிமாவில் திரைப்படங்களில் தான் நடிகைகளைக் கடத்துகின்ற சம்பவங்களைப் பார்த்திருக்கின்றோம். ஆனால் இப்பிடி ஒரு விஷயம் நடிகை நமீதாவுக்கு நிஜத்திலும் நடந்து இருக்கின்றது.

அதாவது பிதாமகன் படத்தில் நடிகை சிம்ரன் ஷூட்டிங் வரும் வழியில் சூர்யா அவரை காரில் கடத்தி சென்று தனது ஊர் மக்களின் முன்னிலையில் ஆட வைப்பார். இதற்காக சிம்ரன் எந்த புகாரையும் சூர்யா மேல் கொடுக்க மாட்டார். இதே போன்றே நிஜத்திலும் நடிகை நமீதா சினிமாவிற்கு வந்த புதிசில் ரசிகர் ஒருவரால் காரில் கடத்தப்பட்டு இருக்கின்றார்.

இது தொடர்பாக நமீதா பேட்டி ஒன்றில் பேசும் போது, "நான் ஒரு கடைத் திறப்பிற்காக எனது மேனேஜருடன் திருச்சிக்கு சென்றிருக்கின்றேன். அப்போது விமான நிலையத்தில் என்னை பிக்கப் செய்ய ஒரு கார் வந்திருந்தது. அதை ஓட்டி வந்த நபர் நான் தான் உங்களை அழைத்து செல்ல வந்தவர் என்று கூறி என்னை காரில் அழைத்து சென்றார், அதன் பின்பு காரில் சென்று கொண்டிருக்கும் போது மேனேஜருக்கு சந்தேகம் எழ அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்" எனக் கூறியிருந்தார்.

மேலும் அவர் ஹோட்டலை சென்றடையும் பொது அங்கு போலீசார் அந்த நபரைக் கைது செய்து இருக்கின்றனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணைகளை நடாத்திய போது, அவர் நமீதாவின் ரசிகர் என்று கூறியிருக்கின்றார். நமீதா இவ்வாறு அப்பேட்டியில் கூறியதைக் கேட்ட ரசிகர்கள், அப்போ நமீதாவின் வாழ்வில் நடந்ததை தான் பாலா 'பிதாமகன்' படக் கதையாக மாற்றி இருக்கின்றாரோ என சந்தேகிக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement