• Apr 26 2024

சுந்தரி சீரியல் படைத்த மெகா சாதனை.. நடிகை பகிர்ந்த சூப்பர் அப்டேட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவி சேனலில்  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் சுந்தரி செம சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்த சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் நடிகை கேப்ரில்லா கதாநாயகியாக நடித்து வருகிறார். ஜிஸ்னு மேனன், கார்த்திக் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

நடிகை ஶ்ரீ கோபிகா, அனு எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கன்னட மொழியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலின் ரீமேக்காக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

சுந்தரியின் கணவர் கார்த்திக், சுந்தரிக்கு தெரியாமல், அனுவை இரண்டாவதாக திருமணம் செய்து, அதனை இரண்டு மனைவிகளிடமும் மறைத்து வாழ்ந்து வந்தார். இதனிடையே சென்னையில் சுந்தரி ஒரு தனி வீட்டில் வசித்து வர, கார்த்தியோ சுந்தரியை அவ்வப்போது வந்து பார்ப்பதும், அனுவுடனேயே பெரும்பாலான நேரங்களை செலவிடுவதுமாய் இருந்து வந்தார்.

இதுகுறித்து எதுவும் தெரியாத சுந்தரியோ கார்த்திக்கின் இரண்டாவது மனைவியான அனுவின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். சுந்தரியும் அனுவும் மிக நெருக்கமாகவும் ஒருவரின் மீது ஒருவர் அளவு கடந்த அன்பும் வைத்திருந்தனர்.

சுந்தரி அனுவின் அலுவலகத்தில் பணிபுரிந்தபடியே கலெக்டராக வேண்டும் என்ற தன்னுடைய கனவுகாக பகுதி நேரமாக படித்தும் வந்தார்.  கார்த்திக், தான் வெளிநாட்டுக்கு வேலை செய்ய செல்கிறேன் என சுந்தரியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் சொல்லிவிட்டு சுந்தரியிடம் இருந்து பிரிந்து அனுவுடனேயே வாழ ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் சுந்தரிக்கு இந்த விஷயம் தெரிந்து விட கார்த்தி மீது கோபமடைந்து கார்த்தியை விட்டு பிரிகிறார். ஆனால் அவருடைய குடும்பத்தினருக்கு கார்த்தியுடன் சேர்ந்து வாழ்வது போல நாடகமாடுகிறார். கார்த்தி அனுவுடன் வாழ்வது, கார்த்தியின் தாய் மற்றும் தந்தைக்கு தெரிந்து விடுகிறது. முன்னதாக அனுவின் தாயாருக்கும் தெரிந்து விடுகிறது. இச்சூழலில் உடல்நிலை மோசமடைந்த ஷங்கர் (கார்த்தியின் அப்பா) மரணம் அடைகிறார்.

இதனால் கார்த்தி மீது கோபம் கொண்ட அவரது அம்மா செல்வி, கார்த்தியை வீட்டை விட்டு துரத்துகிறார். ஷங்கரின் இறுதி சடங்கை சுந்தரி செய்கிறார். இரண்டாவது மனைவி அனுவுக்கு பிரசவ வலியும் ஏற்படுகிறது.

இந்நிலையில் இந்த சுந்தரி தொடர் தற்போது 600-வது எபிசோடில் அடியெடுத்து வைத்துள்ளது. இது தொடர்பாக நடிகை கேப்ரில்லா - ஜிஸ்னு மேனன் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், சுந்தரி தொடர் 600-வது எபிசோடில் அடியெடுத்து வைத்துள்ளது. 

உங்கள் ஆதரவுக்கு நன்றி. இதற்கு பிறகு வரும் எபிசோட்கள் அனைத்தும் மக்களை எண்டர்டெயின்மெண்ட் செய்யும் வகையில் உங்களுக்கு பிடித்தமாக இருக்கும். அதற்கான உழைப்பை நாங்கள் போடுவோம். மக்களுக்கு சுந்தரி டீம் சார்பாக நன்றிகள்" என கூறியுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement