• Jun 05 2025

ஆற்றங்கரையில் அழகாக போஸ் கொடுத்த சுஜிதா.! – இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் மென்மையும் தாக்கமும் நிறைந்த நடிப்பால் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை சுஜிதா. குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கி, இன்று நாயகியாக பல முக்கிய சீரியல்களில் நடித்து வருகின்றார்.  


தற்போது, நடிகைகளின் வாழ்க்கையையும், நடிப்புத் திறமையும் சமமாக பிரபல்யமாக்கும் இடமாக இருக்கும் சமூக வலைத்தளங்களில், சுஜிதா மிகவும் ஆக்டிவாக இருக்கின்றார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் வழியாக ரசிகர்களுடன் பாசமான உறவைப் பேணிவருகின்றார்.


சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆற்றங்கரை அருகில் நின்று எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் சுஜிதா. இயற்கை மற்றும் கலையமைப்பின் மையமாக காணப்படும் ஆற்றங்கரையில், பசுமை மரங்கள் மற்றும் தண்ணீர் ஓட்டம் ஆகியவற்றுடன் கலந்த ஒரு அமைதியான சூழலில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மிகவும் அழகாகக் காணப்படுகின்றன.


இந்தப் புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வெளியான சில நிமிடங்களிலேயே பட்டாசு போல லைக்குகள் குவிந்தன. அத்தோடு, பலரும் அவருடைய இயற்கையான அழகு, எளிமையான உடை மற்றும் அமைதியான சிரிப்பை புகழ்ந்தனர்.

Advertisement

Advertisement