• Apr 26 2024

பொன்னியின் செல்வன் பற்றி சர்ச்சை கருத்தை வெளியிட்ட சுஹாசினி - விளாசிய ப்ளூ சட்டை மாறன்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் மனைவி சுஹாசினி மணிரத்னம் ஹைதராபாத்தில் நடந்த பொன்னியின் செல்வன் திரைப்பட பிரஸ்மீட்டில் பேசிய பேச்சை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்து அடுத்த சர்ச்சையை ஆரம்பித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை 30ஆம் தேதி  உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகளை லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்து வேறலெவலில் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரிலுள்ள டிஜிட்டல் பில்போர்ட்களில் பொன்னியின் செல்வன் டிரைலரை ஒளிபரப்பி வருகின்றன. அத்தோடு, சமீபத்தில் ஹாலிவுட் மலைக்கு மேல் பொன்னியின் செல்வன் டீம் பறக்கவிட்ட சோழர்களின் கொடி வீடியோ ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் மெய் சிலிர்க்க வைத்தது. ஹாலிவுட் படங்களுக்கு நம்ம ஊரில் கிடைக்கும் மரியாதையை போல சமீப காலமாக இந்திய படங்களை ஹாலிவுட் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர்.

அத்தோடு பொன்னியின் செல்வன் படத்தை சரியான முறையில் ப்ரமோட் செய்ய சியான் விக்ரம், ஏ.ஆர். விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பல்வேறு நகரங்களிலும் சிறப்பாக பேசி வருகின்றனர். அதிலும், சியான் விக்ரம் தஞ்சை கோயிலின் சிறப்பையும் அதனை ராஜ ராஜ சோழன் கட்டிய விதத்தையும் பற்றி பேசியது உலகளவில் டிரெண்டாகி வருகின்றது.



பொன்னியின் செல்வன் திரைப்படம் பான் இந்தியா படம் என புரமோஷன் செய்யாமல், ஹைதராபாத்தில் தெலுங்கு ரசிகர்களுக்காக இந்த படம் உங்களுடைய படம் என அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளத்தில்  சர்ச்சையை கிளப்பி உள்ளது. ப்ளூ சட்டை மாறன் தற்போது அதனை ஷேர் செய்து அடுத்த பஞ்சாயத்தை கிளப்பி உள்ளார்.


"பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்தான் அதிகம் நடந்துள்ளது. ஆகவே இது தெலுங்கு மக்களின் படம். இப்படத்தை நீங்கள்தான் வெற்றியடை செய்ய வேண்டும் - Suhashini at PS 1 Promo event in Andhra." என அவர் பேசிய வீடியோவையும் ஷேர் செய்து வெளுத்து வாங்கி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


அத்தோடு பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக உருவாகி உள்ள நிலையில், ஒவ்வொரு ஊருக்கும் படக்குழு செல்லும் போது, இது உங்க படம் தாங்க என்றும் உங்க படம் மாதிரி தான் என்றும் ப்ரமோஷனுக்காக பேசுவது வழக்கம். அப்படி இல்லை என்றால், அந்த ஊர் ரசிகர்களை கனெக்ட் பண்ண படத்தில் என்ன விஷயம் இருக்கோ அதனை கூறுவார்கள். அதே போலத்தான் சுஹாசினியும் ஆந்திராவில் பேசியுள்ளார் என ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.


இரவின் நிழல் படத்திற்கு பிறகு பார்த்திபன் உடன் பெரும் சண்டையை ப்ளூ சட்டை மாறன் போட்டு வந்த நிலையில், அதன் பிறகு பார்த்திபன் அமைதி காத்ததும் அந்த பிரச்சனை முடிந்தது. அத்தோடு இதே போல இறங்கி செய்வேன் என கெளதம் மேனன் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் பல ட்வீட்களை போட்டு கேள்வி எழுப்பி அசிங்கப்படுத்தி வந்தாலும், அதை கண்டுக்காமல் விட்டு விட்ட நிலையில், இந்த வார ரிலீஸான பொன்னியின் செல்வன் படம் பக்கம் தனது பார்வையை செலுத்தி உள்ளார் ப்ளூ சட்டை மாறன் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement