• May 21 2024

'எல்லாத்துக்கும் காரணம் ஸ்ருதிகா தான்'-ரசிகையால் நெகிழ்ச்சிக்குள்ளான குக்வித் கோமாளி குரேஷி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, வித்யுலேகா, ரோஷினி, தர்ஷன், அந்தோணி தாஸ், சந்தோஷ் பிரதாப் , ஸ்ருதிகா ஆகியோர் களம் இறங்கினார்கள் . இப்போது இவர்களில் ஸ்ருதிகா வித்யுலேகா , தர்ஷன் ,அம்மு அபிராமி ஆகியோரே இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

மிகப் பெரிய பீக்கில் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது முக்கிய கோமாளியான குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவர் எழுதிய உருக்கமாக கடிதத்தை பகிர்ந்துள்ளார்.

அதில், அண்ணா இந்த விஷயத்தை நான் சொல்லியே ஆகனும், நீங்க இதுக்கு ரிப்ளே பண்ணுவீங்களானு எனக்கு தெரியாது. ஆனால் சில நாட்களான நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். எனக்கு என்ன பண்றதுனே தெரியல அந்த நேரத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் பார்த்தேன்.

அந்த எபிசோடில் நீங்க ஸ்ருதிகா மாதிரி பேசுன டையலாக் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு, இந்த எபிசோடையே கிட்டத்தட்ட 100முறை பார்த்துவிட்டேன் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ சிக்கிரம் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று, ரொம்ப எமோஷனலான ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவை குரேஷி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து எல்லாத்தும் காரணம் ஸ்ருதிகா தான் கூறியுள்ளார். இணையத்தில் இந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement