தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் நடிகர் ராஜேஷ் காலமானார். அதற்குள் இந்த வாரம் விக்ரம் சுகுமாரன் இறந்தது தமிழ் சினிமா துறைக்கும் ரசிகர்களுக்கும் மீண்டும் பேரதிர்ச்சியாக உள்ளது .
இவர் "மதயானைகூடடம் , ராவணக்கோட்டம்" போன்ற திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இந்த நிலையில் "பொல்லாதவன் , ஆடுகளம் " எனப் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். மேலும் இவர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
மேலும் வெற்றிமாறனுடன் இணைந்து ஆடுகளம் படத்தின் திரைக்கதைக்கு வசனம் எழுதி இருந்தார். மேலும் இவர் தயாரிப்பாளர் ஒருவரிடம் அடுத்த படத்திற்கான கதையை சொல்லி விட்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே வைத்திய சாலைக்கு கொண்டு சென்றது போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். என்ற தகவல் சமூக வலைத்தள பக்கதில் பதிவிட்டு வருகின்றார்.
மேலும் "ராவணக்கோட்டம்" படத்தில் நடித்த சாந்தனு தனது எக்ஸ்தளத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். "அமைதியாக உறங்குங்க சகோதரா. உங்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு தருணத்தையும் எப்போதும் போற்றுவேன். மிக விரைவாக சென்றுவிட்டீர்கள்" என்றும் இரங்கல் தெரிவித்திருந்தது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!