சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் பிரேம் குமார் பகிர்ந்துள்ள உணர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, தனது மகனின் கல்விக்காக கடுமையான பொருளாதார சிக்கலில் இருந்ததாகவும், வங்கி கடன் பெற முயன்றபோதும் தனது பெயரில் வீடு மட்டுமே இருந்ததால் கடன் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த கடினமான நேரத்தில், எந்த தயக்கமும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் ரூபாய் உதவி செய்ததாக பிரேம்குமார் கூறியுள்ளார். அந்த உதவி தான் தனது மகனின் கல்வியை தொடர்ந்து முன்னேற்ற உதவியதாகவும், இன்று தனது மகன் மாதம் 4 முதல் 5 லட்சம் வரை சம்பாதிக்கும் நிலைக்கு உயர்ந்திருப்பதற்குக் காரணமாக இருந்ததாகவும் அவர் உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், சிவகார்த்திகேயனின் மனிதநேயத்தையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. திரையில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் அவர் பலருக்கு ஆதரவாக நிற்பவர் என்பதை இது காட்டுகிறது.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், சிவகார்த்திகேயனின் இந்த நற்குணத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!