• Sep 19 2024

வெற்றி மீது கோபத்தில் வந்த சக்தி - கடைசியில் ரசிகர்களுக்கு காத்திருந்த டுவிஸ்ட்..மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இவ்வாறுஇருக்கையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்...

கோகிலா மற்றும் சங்கிலி என இருவரும் இரவு முழுவதும் வெற்றி வீட்டில் தங்கிய விஷயத்தை சொல்ல சக்தி கோபத்தோடு வீட்டுக்கு வந்து மீனாட்சியிடம் அவனை எதுக்கு தங்க வச்சீங்க என சண்டையிடுகிறாள்.

இதனையடுத்து துர்கா அம்மாவை கொலை நினைத்த ரவுடிகள் இருந்து காப்பாற்றியது வெற்றி தான் என கூறி  ரத்தக்கரையுடன் இருக்கும் அவனது சட்டையை எடுத்து வந்து கொடுக்க ...அதை சக்தி வாங்கி தவறாக நினைத்து விட்டோம் என எண்ணி  வருத்தப்படுகிறார். அந்தச் சட்டையில் ரூமுக்கு வரும் சக்தி வெற்றியுடனான நினைவுகளை அசைப்போடுகிறார்.

இதன் பின்னர் வெற்றி ஜீப்பின் முன்னாள் உட்கார்ந்து கொண்டு வலி தாங்க முடியல வலிக்குது, மருந்து போடுங்கடா என்ன தன்னுடைய நண்பர்களிடம் சொல்கிறான். அதே சமயம் அதிகம் மருந்து போடணும் இல்லனா கொன்னுடுவேன் என சொல்ல முதலில் தயங்கும் நண்பர்கள் பிறகு சக்தி பற்றி பேச்சு கொடுத்துக் கொண்டே மருந்து போட ஆரம்பிக்கின்றனர்.

எனினும் இந்த நேரத்தில் சக்தி அங்கு வர சக்தி பார்த்த வெற்றி நண்பர்கள் நைசாக விலகிக் கொள்ள சக்தி எதுவும் பேசாமல் வெற்றியின் பின்னால் நிற்கிறாள். அப்போது வெற்றி மருந்து போங்கடா வலிக்குது என கத்த சக்தி மருந்து போடுகிறாள்.

வெற்றி சக்தி பற்றி பேச அதை எல்லாம் கேட்டு கண் கலங்குகிறார் சக்தி. அவளது கண்ணீர் துளி வெற்றியின் முதுகில் விழுந்ததும் வெற்றி திரும்ப பார்த்து அதிர்ச்சி அடைகிறான். சஅத்தோடு ங்கிலியை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என அறிவுரை கூற முயற்சி செய்ய சக்தி இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என உறுதியாக சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறாள். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Advertisement

Advertisement