• May 03 2024

கண்ணீர் விட்டு அழுத பார்த்திபன்… டிவிட்டரில் உருக்கம்-நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஆமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சிங் சதா. இப்படத்தில் ஆமீர் கானுடன், கரினா கபூர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உள்ளிட்ட பலர் அதில் நடிக்கின்றனர். இந்தி படமான இப்படம் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் ஆமீர் கான் சென்னை வந்துள்ளார். அத்தோடு கோலிவுட் சினிமா செலிபிரிட்டிகளுக்காக நேற்று மாலை ஸ்பெஷல் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும் இதனை பார்த்த நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் அதனை லால் சிங் சத்தா திரைப்படம் கண்ணீரை வரவழைத்துவிட்டதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது…, "லால் சிங் சத்தா பார்த்து கண் கலங்க அமீர் கானிடம் சொன்னேன்,
“ வெறுப்பும் நெகட்டிவிட்டியும் நிறைந்த இந்த சமூகத்தில் இந்த படத்தின் மூலம் நீங்கள் அன்பை பரப்புகிறீர்கள் ” அற்புதமான படம். அன்பை, அர்ப்பணிப்பை, காதலை,க டமையை கண்ணியத்தை இதை வட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா?

அத்தோடு வெறுப்பை பருப்பாய் கடைந்து,அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி Dal Makhani செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு இப்படம் அவசியம்.

தூர்தர்ஷனில் இருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க, நான் அனுப்ப தேசிய விருதுக்கா?” என்ன ஒரு கலை மதிப்பு? பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது". என பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement