தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் என்னும் கிராமத்து கதைக்களம் கொண்ட படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் கார்த்தி. இவர் இதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கின்றார்.இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் சர்தார்.
இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது என்று ஏற்கனவே உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்படத்தின் ரிலீஸ் நாளிலேயே பிரின்ஸ் படமும் ரிலீஸ் ஆகக் காத்திருக்கின்றது.
இந்நிலையில் சர்தார் படத்துக்கு பிரின்ஸ் படத்தைவிட அதிக திரைகளில் வெளியாகிறதாம். அதற்குக் காரணம் சர்தார் படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட்டு வருவதால் அந்த நிறுவனம் வெளியிடும் படமான சர்தார் படத்தையே அதிக எண்ணிக்கையில் ரிலீஸ் செய்கிறார்களாம்.
இந்நிலையில் ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில் இன்னும் வெளிநாட்டுக்கு கண்டெண்ட் அனுப்பவில்லையாம். இதனால் அங்கு சென்சார் பெற்று குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களாம். இதனால் சர்தார் படக்குழு கடும் குழப்பத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!