• May 19 2024

சரத்குமார் sir Shot-காக கெட்டுபோன சாப்பாட்டை சாப்பிட்டாரு- நீண்டநாள் ரகசியத்தை உடைத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவான சரத்குமார், சமீப காலமாக... நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமான, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சரத்குமார் நடித்த, காஞ்சனா 2, சென்னையில் ஒரு நாள், வாரிசு, மற்றும் 'பொன்னியின் செல்வன்' போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என படு பிஸியாக நடித்து வருகிறார். இது தவிர அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.

இந்த நிலையில் சரத்குமார் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது சரத்குமார் நடிப்பில் வெளியாகிய சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சூர்ய வம்சம். இப்படத்தினை இயக்குநர் விக்ரமன் இயக்கியிருந்தார்.


எனவே விக்ரமன் தான் ஓர் பேட்டியில் சூர்யவம்சம் படத்தில் நடந்த சீன் குறித்து சொல்லியுள்ளார். அதாவது கல்யாண வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு முடிய சரத்குமார் மட்டும் தனியாக இருந்து சாப்பிடுவார். அவருக்கு தேவயானி பரிமாறுவார். எனவே இந்த சீன்ல வைக்கப்பட்ட சாப்பாடு கெட்டுப் போனதாம்.

அந்த சீன் நல்லா வரவேண்டும் என்பதற்காக சரத்குமார் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு கட் சொன்னதும் ஓடிப் போய் அந்த சாப்பாட்டைத் துப்பியதோடு நடந்ததைப் பற்றியும் சாப்பாடு கெட்டுப்போனது பற்றியும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement