தொலைக்காட்சி சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து பின்னர் நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடியாக மாறியவர்கள் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதியினர். அதாவது விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த 'ராஜா ராணி' சீரியல் மூலம் இருவரும் திரைக்குள் அறிமுகமாகி இருந்தனர்.
இந்த சீரியலானது வசதியான வீட்டில் வேலை செய்யும் படிக்காத பெண், அந்த வீட்டின் இளைய மகனை திருமணம் திருமணம் செய்து கொள்ளும் கதைக்களத்தை மையமாக கொண்டிருந்தது.
காதலித்து கரம் பிடித்த பின்னர் நாயகி அந்த குடும்பத்தினரால் படும் இன்னல்கள், கஷ்டங்கள், கொடுமைகள் பின்னர் குடும்பத்திற்காக நாயகி செய்யும் செயல்கள் என பல செயற்பாடுகள் வாயிலாக ரசிகர்கள் மனங்களை பெரிதும் கவர்ந்து விட்டார்.
இந்த சீரியலின் நாயகியான ஆலியா மானசா இதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி விட்டார். இதனைத் தொடர்ந்து 'ராஜா ராணி சீசன் 2' தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலிலும் முதலில் ஆல்யாதான் நாயகியாக நடித்திருந்தார்.
இருப்பினும் இரண்டாவது முறையாக தாயானதால் சீரியலில் இருந்து விலகி இவர் தற்போது வேறொரு சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல சஞ்சீவி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' நாடகத்தில் நாயகனாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது கலா மாஸ்டர் நடத்தி வரும் சிறப்பு பேட்டியில் தங்களுடைய முந்தைய வாழ்க்கை குறித்துப் பேசியுள்ளார் சஞ்சீவ். அதாவது கலைத்துறைக்கு இவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தியவர் கலா மாஸ்டர் தான். அவருடைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த தம்பதிகள் தங்களது முந்தைய வாழ்க்கை குறித்து கண்ணீருடன் பேசியது ரசிகர்கள் பலரது மனதையும் கலங்கடித்துள்ளது.
இது தொடர்பாக சஞ்சீவ் பேசுகையில் "ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சியில் இருக்கும்போது பெட்ரோல் போட கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும் அந்த நேரத்தில் வாங்கிய காரை கூட விற்று விட்டதாகவும்" கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மேலும் "அதன்பின் தான் ராஜா ராணி சீரியல் வாய்ப்பு வந்தது. பின்னர் லைப்ஃபே மாறிவிட்டது. ஆல்யா வந்த பின்பு இருவரும் கார், வீடு, பங்களா என செட்டிலாகி விட்டோம்" எனவும் கூறியுள்ளார் சஞ்சீவ்.
இன்று பிரபலமாக உள்ள அனைவரும் ஏதோ தடைகளைத் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கின்றார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
Listen News!