• Oct 22 2024

தனிக்குடித்தனம் போக முடிவெடுத்த ப்ரியா... அதிர்ச்சியில் ஆடிப் போன காவியா... இனி நடக்கப்போவது என்ன..? பரபரப்பான 'ஈரமான ரோஜாவே' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான் ரோஜாவே சீசன் 2.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது இந்த சீரியலின் உடைய புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் காவியாவிடம் ப்ரியா "என் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்பதற்காக ஒரு முடிவெடுத்துள்ளேன்' எனக் கூறுகின்றார்.


பதிலுக்கு காவியா "அது என்ன" எனக் கேட்கின்றார். அதற்கு ப்ரியா தான் ஜீவாவுடன் தனிக்குடித்தனம் போறேன் எனக்கூறுகின்றார். இதற்கு காவியா "அத்தையும், மாமாவும் எங்களை மருமகளாக பார்க்கல மகளாகப் பார்க்கின்றனர், தனியாய்ப் போய் வாழணும் என்று நினைக்கிறது எனக்கு என்னவோ சரியாய்ப் படல" எனக் கூறுகின்றார்.


பதிலுக்கு ப்ரியா "ஜீவாக்கும் தனிக்குடித்தனம் போறது விருப்பம் இல்லை, உனக்கும் விருப்பம் இல்லை என்றால் என் வாழ்க்கையை நான் எப்போ ஜீவாவோட ஆரம்பிக்கிறது, ஜீவா என் கூட வந்தாலும் வராட்டிலும் நான் இந்த வீட்டை விட்டுப் போயே தான் தீருவேன்" எனக் கூறி செல்கின்றார். இதனால் காவியா அதிர்ச்சியடைந்து நிற்கின்றார்.


Advertisement