• May 20 2024

ப்ளீஸ் இப்படிப் பண்ணாதீங்க... உடல்நிலை குறித்து வெளியான தகவல்... கவலையில் நடிகை கல்யாணி..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின் ஹீரோயினாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் பன்முகத் திறமை கொண்ட ஒருவராக வலம் வந்தவர் கல்யாணி. 

2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்ட கல்யாணிக்கு இப்போது 5வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கிய அவர் மீண்டும் சின்னத்திரை பக்கம் தலை காட்ட தொடங்கினார்.


இந்நிலையில் கல்யாணி சமீபத்தில் தனக்குள்ள பிரச்சினை குறித்தும், வைத்தியசாலையில் இருப்பது குறித்தும் தெரிவித்திருந்தார். அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டா பக்கத்தில் நடக்க முடியாமல் இருக்கும் கல்யாணியை செவிலியர்கள் கைத்தாங்கலாக அழைத்து செல்லும் வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.


அத்தோடு தனக்கு இரண்டாவது முறையாக முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடந்துள்ளதாகவும் அதில் தெரிவித்தார். இதனையடுத்து கல்யாணியின் உடல் நிலை குறித்து இணையத்தளங்களில் பலவாறாக வதந்தி பரவியது. அதாவது குறிப்பாக கல்யாணிக்கு சிகிச்சை நடப்பது போன்று வீடியோக்கள் வெளியாகி இருந்தன.

இதனால் பதறிப் போன கல்யாணி இதற்கு மறுப்புத் தெரிவித்து தற்போது ஒரு கருத்தினையும் வெளியிட்டிருக்கின்றார். அதாவது "எனது உடல்நிலை குறித்து பலரும் தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் இறந்த யாரோ ஒருவரின் உடம்பில் எனது முகத்தை மார்பிங் செய்து ஒட்டி உள்ளனர்" எனக் கூறியுள்ளார்.

மேலும் "நான் உடல்நிலை சரியில்லாதபோது சந்தித்த பிரச்சினைகள் குறித்து பேசினேன். ஆனால் எனது உடல் நிலை குறித்து தவறான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தயவு செய்து யாரும் இப்படி செய்யாதீர்கள்'' எனவும் தெரிவித்துள்ளார் நடிகை கல்யாணி.

Advertisement

Advertisement