• Apr 26 2024

கணவன் மட்டுமே போதும்- ஆடம்பர அலப்பறையின்றி வளைகாப்பினை செய்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் அனு. இவர் ஷு தமிழ் விஜய் டிவி என பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்திருக்கின்றார்.அந்த வகையில் தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து வருகின்றார்.


இதில் ரோஷினி என்னும் கதாப்பாத்திரத்தில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து வந்தார். இதன் ஷூட்டிங் சமயத்தில் இவர் கர்ப்பமானதால், இவரது கதாபாத்திரத்தையே அவ்வாறு மாற்றியமைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடித்து வருகிறார் அனு.


இவர் கடந்த 2017-ம் ஆண்டு விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்கு பின் தற்போது அனு 2வது முறையாக கர்ப்பமாகி உள்ளார். இத்தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்க போகிறது. தற்போது 7 மாத கர்ப்பினியாக இருக்கும் அனுவுக்கு வளைகாப்பு நடைபெற்று உள்ளது.


இந்த வளைகாப்பு அனுவுக்கு ஸ்பெஷலான ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் அவரது கணவர் மட்டுமே இந்த வளைகாப்பு நிகழ்வை நடத்தி உள்ளார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என யாரையும் அழைக்காமல் சிம்பிளாக நடந்து முடிந்த இந்த வளைகாப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள அனு, சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


அந்த பதிவில், எனது வளைகாப்பு சிம்பிளாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என நானும் விக்கியும் விரும்பினோம். விக்கி தான் எனக்கு நலங்கு செய்தார். அந்த தருணம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. அப்போது புதுமணப் பெண் போல் என் முகம் சிவந்தது” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


அனுவின் வளைகாப்பு புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement