• May 20 2024

''முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல'' - பெரிய பங்களா வீடு கட்டிய அறந்தாங்கி நிஷா

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா கோலமாவு கோகிலா படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது நிஷா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ராமருடன் காமெடி செய்து வருகிறார். இதே நிகழ்ச்சியில் அர்ச்சனா நடுவராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிஷா வீடு வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியானது. அதுவும் தனியார் சேனல் ஒன்று நிஷா ஒரு பிராம்மாண்ட பங்களாவை வாங்கி இருப்பது போன்று புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தது.

இந்த செய்தியை கண்டு பலர் நிஷாவிற்கு வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு சிலர் நிஷாவை கேலி செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அந்த செய்தியை பகிர்ந்த நிஷா ‘அது எப்படிப்பா எனக்கே தெரியாம நான் பங்களா கட்டுவேன், பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா, இத பாத்துட்டு நிறைய பேரு எனக்கு வாழ்த்து சொன்னீங்க, நிறைய பேரு என்ன கிண்டல் பண்ணீங்க .இது வதந்தி தான், ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவுமே இல்ல சீக்கிரமா இப்படி ஒரு பங்களா கட்டுவோம்….. சத்தியமா சொல்றேன் இது என் வீட்டு வீடு இல்லங்கோ’ என்றுபதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அந்த யூடுயூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட நிஷா, தான் கட்டும் புதிய வீட்டினை காட்டியுள்ளார், அதில் பலரும் வந்து இந்த மூஞ்சு எங்க பங்களா வீடு கட்ட போகிறது என்று கேட்டார்கள், அதை மனதில் வைத்து தான் சொந்த வீடு கட்டியே ஆகணும் என்று கட்டி வந்தார். இப்படி ஒரு நிலையில், தான் சொன்னபடியே சொந்தமாக வீடு கட்டி குடியேறி இருக்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement