சினிமாவில் நட்சத்திரங்களாக திகழ்ந்து வந்த பலரும் நிஜ வாழ்க்கையிலும் நட்சத்திர ஜோடிகளாக மாறியது உண்டு. அப்படிப்பட்ட ஒரு ஜோடி தான் சமந்தா-நாகசைதன்யா தம்பதிகள்.
இவர்கள் இருவரும் ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திடீரென விவாகரத்து செய்து பிரிந்து கொண்டமை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அந்தப் பிரிவின் உடைய வலியை தாங்க முடியாமல் நாக சைதன்யாவும் சமந்தாவும் சோகத்தில் இருந்து வருவதை காண முடிகிறது என ரசிகர்கள் பலரும் கூறி வந்திருந்தனர். எனினும் சமந்தா கணவரை விட்டு பிரிந்ததும் ஏகப்பட்ட கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தியும், மது நிறுவன விளம்பரங்களில் நடித்தும் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து திடீரென சோஷியல் மீடியா பக்கமாக சமந்தாவை காணவில்லையே என ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்த நிலையில், வெறும் 'யசோதா' படத்தின் அறிவிப்பு மற்றும் 'சகுந்தலம்' படத்தின் அறிவிப்பை மட்டுமே வெளியிட்டு வந்தார் சமந்தா.
இந்நிலையில் தற்போது மீண்டும் சோஷியல் மீடியாவில் சமந்தா பதிவிட்டுள்ள போஸ்ட் ஒன்று ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதாவது முகத்தைக் கூட காட்டாமல் வெறும் டீசர்ட்டில் உள்ள வாசகத்தை மட்டுமே ஹைலைட் செய்து சமந்தா காட்டி இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அவர் தனிமையில் வாடி வருகிறாரா? என்கிற கேள்வி கிளம்பி உள்ளது.
மேலும் YOU'LL NEVER WALK ALONE என்கிற டீசர்ட் வாசகத்தை போட்டோ எடுத்து காண்பித்துள்ள சமந்தா, அதற்கு கேப்ஷனாக In case you needed to hear this as well.. YOU'LL NEVER WALK ALONE என்றும் பதிவிட்டுள்ளார்.
இதன் காரணமாகத்தான் அவர் தனிமையில் வாடுகிறாரா? அல்லது இனிமேல் தனிமையில் வாட போவதில்லை என்பதை சூசகமாக சொல்கிறாரா என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.
சமந்தாவின் இந்த போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். இருப்பினும் சில ஆபாச கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் "தனிமையில் வாடும் சமந்தாவுக்கு துணையாக நான் வேணா கூட வரவா" என ஒரு ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார். இந்த கமெண்டானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி வருகின்றது.
அதுமட்டுமல்லாது யாரும் தனியாக நடந்து செல்வதில்லை என்கிற டீசர்ட் வாசகத்தை காட்டியிருக்கும் சமந்தா, அடுத்த திருமணத்துக்கு ரெடியாகி விட்டாரா? அதற்கான சிக்னலா இது? எனவும் குழப்பத்தில் ஏகப்பட்ட நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Listen News!