• May 20 2024

திருமண ஏற்பாட்டில் பிஸியாக இருப்பதால் கேன்ஸ் விழாவிற்குச் செல்ல மறுத்த நயன்தாரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

சர்வதேச 75வது கேன்ஸ் திரைப்பட விழா ஃபிரான்ஸில் நேற்று முதல் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய சினிமா நட்சத்திரங்கள் பலரும் கேன்ஸ் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி அக்ஷய் குமார், நவாசுதீன் சித்திக், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், தமன்னா பாட்டியா, பூஜா ஹெக்டே, அதிதி ராவ் ஹைதாரி, கமல்ஹாசன், மாதவன், ஏஆர் ரஹ்மான், பார்த்திபன், பா ரஞ்சித் உட்பட பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

அத்தோடு இந்த விழாவில் பங்கேற்றுள்ள பிரபலங்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாராவும் கேன்ஸ் விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தாவது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் வருகின்ற ஜுன் மாதம் திருப்பதியில் திருமணம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருவருமே திருமண வேலைகளில் பிஸியாக உள்ளனர். ஆகையால் அவர் கேன்ஸ் விழாவில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement