தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் புகழப்படும் நடிகை நயன்தாரா. இவரின் அழகிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை எனலாம். இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்குப் பின்னரும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். அந்தவகையில் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்த 'காட் ஃபாதர்' படத்தில் முக்கிய ரோலில் நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படமானது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகி நான்கே நாளில் 100 கோடி அளவில் வசூலித்திருந்ததாம் . இந்நிலையில் இப்படத்திற்காக சூப்பர் ஸ்டார் நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதில் மெகா சூப்பர் ஸ்டாருக்கு 40 கோடியும், சல்மான் கானுக்கு ஆரம்பத்தில் 20 கோடி சம்பளமாக பேசப்பட்டது.
ஆனால் சிரஞ்சீவி மீது கொண்ட அன்பால் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்திருக்கிறாராம் நம்ம சல்மான் கான். அதுமட்டுமல்லாது நயன்தாரா இரட்டை குழந்தை பெறும் சமயத்தில் வெளியாகி ஓடிய முதல் படம் என்றால் அது இப்படம் தான். இப்படத்திற்காக 4 கோடி சம்பளமாக நயன்தாரா பெற்றுள்ளாராம். இதனை அடுத்து ஜவான் படத்திற்காக 10 கோடி சம்பளமாக பெறவுள்ளார்.
இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் எல்லாம் "குழந்தைங்க வந்த நல்ல நேரம் தான்" எனக் கூறி வருகின்றனராம்.
Listen News!