தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக டப்பிங் பேசி வருவதோடு கதாநாயகியாகவும் நடித்து வருபவர் தான் அஞ்சலி நாயர்.இவர் இறுதியாக தமிழில் அண்ணாத்த திரைப்படத்தில் இளம் வயது ரஜினிகாந்திற்கு அம்மாவாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
அதே போல மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலின் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கும் போலீஸ் உளவாளியாக நடித்திருந்தார்.ஏற்கனவே திருமணமாகி இருந்த இவர் தனது முதல் கணவரை பிரிந்த நிலையில் இரண்டாவதாக கடந்த பிப்ரவரி மாதம் அஜித் ராஜூ என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தான் நடித்த படம் ஒன்றுக்கு டப்பிங் பேசுவதற்காக தனது கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு வந்த அஞ்சலி நாயர் குழந்தையை தனது மடியில் கிடத்தியபடியே தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் அஞ்சலி நாயர். கைக்குழந்தையுடன் இருந்தாலும் தன்னால் படத்தின் பணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிரத்தையுடன் அவர் டப்பிங் பேச வந்தது குறித்து நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!