இந்திய சினிமாவில் பிரபல்யமான நடிகைகளில் ஒருவர் நஸ்ரியா நசீம். இருப்பினும் திரையுலகில் இவரின் பயணம் முதலில் தொலைக்காட்சியிலிருந்தே ஆரம்பமானது. அதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர்.
மேலும் மலையாளத் திரைப்படங்களில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் பின்னர்தமிழிலும் ஹீரோயினாக நடித்து அசத்தி இருந்தார். இவரின் கியூட்டான அழகிற்கும், குழந்தைத்தனமான நடிப்பிற்கும் என்றே இவருக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.
இவ்வாறாக பல படங்களிலும் நடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மனதில் குடி கொண்ட இவர் மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசில் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்ட நஸ்ரியா தனது பொழுதைக் கழிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் எப்போதும் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.
அந்தவகையில் தற்போதும் தனது கணவருடன் இணைந்து வானத்தில் இருந்து குதிக்கும் வகையில் அமைந்த புகைப்படங்களை பதிவேற்றி இருக்கின்றார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் "உங்களுக்குள் இவ்வளவு தைரியம் இருக்கின்றதா" எனக்கேட்டு கமெண்டுகளைத் தெறிக்க விட்டு வருகின்றனர்.
Listen News!