நடிகை நயன்தாராவும் அவரது கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவனின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
அதாவது இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.இதன் பின்னர் கேரளாவிலுள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று ஜோடியாக விக்னேஷ் சிவன் & நயன்தாரா சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.
அத்தோடு சில வாரங்களுக்கு முன் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்தோடு லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை விரும்பினர். மேலும் பலர் அந்த பதிவில் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள்.
இவ்வாறுஇருக்கையில் சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் & நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் & சக நண்பர்களுடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வருகின்றன.
Listen News!