• Sep 19 2024

இயக்குநருடன் நெருக்கமாக இருக்கும் மீரா ஜாஸ்மின்- இது தான் காரணமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடத்தே பிரபலமானவர் மீரா ஜாஸ்மின். மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், சில காதல் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார் என்று தான் கூற வேண்டும்.

எனினும் அந்த வகையில் உச்ச நடிகையாக வலம் வந்த போதே மாண்டலின் ராஜேஷ் என்பவருடன் அவர் காதல் வயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அதிர்ச்சி கொடுத்தார் மீரா ஜாஸ்மின். திருமணத்திற்கு பின்னர் சினிமாவிலில் இருந்து விலகிய மீரா ஜாஸ்மின், நடிப்புக்கும் முழுக்கு போட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகிப்போயினர்.

இதையடுத்து 2 ஆண்டுகளிலேயே அவர் அவரது கணவரை பிரியவுள்ளதாக செய்திகள் தீயாய் பரவி வருகின்றது. ஆனால் அதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. சமீபத்தில் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த மீரா ஜாஸ்மின், தாராளமாக கவர்ச்சி காட்டி தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார்.

இந்நிலையில், மலையாள இயக்குநர் அருண் கோபியை இருக்கமாக கட்டி அணைத்தவாரு நடிகை மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.

மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவரும் எந்தவித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement