• May 05 2026

மதுரையில் தவெக கொடி கம்பம் விழுந்த விபத்து...!நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையீடு...!

Roshika / 8 months ago

Advertisement

Listen News!

மதுரை அருகே நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ஏற்பட்ட கொடி கம்பம் விபத்து குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் இன்று கவலை தெரிவித்து முறையீடு செய்தனர்.


மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடி கம்பம் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு, எதிர்காலத்தில் இத்தகைய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

வழக்கறிஞர்கள் அளித்த தகவலின்படி, மதுரை ரிங் ரோடு மற்றும் மாநாட்டு திடலின் சுற்றுவட்டாரங்களில் அனுமதி பெறாமல் பேனர்கள், பதாகைகள் மற்றும் கொடி கம்பங்கள் அதிகமாக வைக்கப்பட்டுள்ளன. காற்று அதிகமாக வீசும் சந்தர்ப்பங்களில் இவை விபத்துக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு குன்றும் நிலை உருவாகும் என்ற கவலை தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள் மற்றும் கொடி கம்பங்களை அகற்றி, அதற்கான அறிக்கையை துறை சார்ந்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Advertisement

Advertisement