• May 18 2024

சுந்தரி பற்றி பேசி அனுவிடம் சிக்கிக் கொண்ட கார்த்திக்- அவர் முகத்தில என்ன ஒரு பயம்- விறுவிறுப்பான திருப்பங்களுடன் சுந்தரி சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்பிடியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

அதிலும் கணவன் கார்த்தி அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் அனு தன்னுடைய செக்கப்பிற்காக செல்லும் போது சுந்தரியை கூட்டிக் கொண்டு போய் செக்கப் செய்தபோது சுந்தரிக்கு குழந்தை பிறக்காது என்று சொன்ன விடயம் பொய் என்று தெரிந்த விட்டது. இதனால் அனு சுந்தரியின் புருஷனை போலீஸில் புடிச்சுக் கொடுக்கணும் என்று சொல்கிறார்.


அந்த நேரம் கார்த்தி இந்த விடயம் சுந்தரியின புருஷனுக்கு தெரிஞ்சிருக்கும் என்று சொல்ல அனு அது எப்பிடி தெரிஞ்சிருக்கும் என்று சொல்ல கார்த்திக் என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கின்றார்.அத்தோடு சுந்திரி கார்த்திக்கின் அக்காவிடம் சென்று மாமா ஊருக்கு கார்த்திக்கையும் தான் கூட்டிட்டு வரச் சொன்னாரு அங்க வந்து எல்லாம் எங்க தம்பியை என்னால் காப்பாற்ற முடியாது என்கிறார். இதனால் இனி வரும் நாட்களில் என்ன நடக்கவுள்ளது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Advertisement

Advertisement