• Oct 22 2024

காஞ்சிபுரம் வந்ததுமே வெற்றியை கைது செய்த அபி- எதிர்பாராத திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியல் கடந்த வாரத்திலிருந்து வித்தியாசமான கதைக் களத்துடன் ஒளிபரப்பாகி வருகின்றது.

அதாவது காதல் ஜோடியாக இருந்த வெற்றியும் அபியும் பிரிந்து விட்டனர். வெற்றி தனத அண்ணி செய்த கொலைப் பழியை தான் செய்ததாகவே ஏற்றுக் கொண்டு பிரிந்து விட்டார். இதனால் அபி காஞ்சபுரம் ஊரே வேண்டாம் என்று வேறு ஒரு ஊரில் வசித்து வந்ததோடு மாவட்ட ஆட்சியாளர் பதவியையும் பெற்று விட்டார்.


இதனை அடுத்து தற்பொழுது அபி மீண்டும் காஞ்சிபுரத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் வெற்றி இங்கே பெரிய ரௌடியாக மாறி விட்டார்.இப்படியான நிலையில் அபி வந்ததும் முதலிலேயே வெற்றியை கைது செய்கின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.






Advertisement