• May 06 2024

பாட்டியுடன் அமிர்தாவை சேர்த்துவைக்க ஜெனி போட்ட திட்டம்; காபி கப்பை வீசியெறிந்த பாட்டி - பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் நாளுக்கு நாள் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன.

அந்தவகையில் இன்றைய எபிசோட்டில் இனியா நிலா பாப்பாவை தூக்கிக்கொண்டு அந்த வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று சொல்ல, அதற்கு எழில் அங்கே வேண்டாம் எனக் கூற, இல்லை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி இனியா குழந்தையை தூக்கி செல்கிறார்.


அங்கு சென்றதும் இனியா மற்றும் மயூவுடன் நிலா பாப்பா ரொம்பவே ஜாலியாக விளையாடுகிறது. மேலும் இனியா "நிலா பாப்பாவுக்கு நான் அத்தை வேணும் நீங்க என்ன வேணும்" என தாத்தாவிடம் கேட்க, அதற்கு அவர் "நான் கொள்ளு தாத்தா" எனக் கூறுகின்றார். அத்தோடு "அப்போ அப்பா என்ன வேணும்" என கேட்க பையனோட குழந்தை என்றால் தாத்தா வேணும் என ராமமூர்த்தி கூறுகின்றார்.

இதனைப் பார்த்ததும் உடனே கோபி ஷாக்காக ராதிகா நக்கலாக அவரைப் பார்க்கிறார். பிறகு தாத்தா குழந்தையை தன்னுடைய தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டு சந்தோஷமாக கூட்டி வர இதை பார்த்த அமிர்தா மிகவும் சந்தோஷப்படுகிறார். 


இதன் பின்னர் அமிர்தா கண்கலங்க ஏன் என எழில் கேட்க, அதற்கு "நீங்க எல்லோரும் நிலாவ இப்படி பாத்துப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல அதான் எனக்கு சந்தோஷமா இருக்கு" என அமிர்தா சொல்ல, தாத்தா "பெரியவங்க பண்ற தப்புக்கு குழந்தைகள் என்ன பண்ணுவாங்க?" என்ன சொல்கிறார்.

அதன் பிறகு செழியன் வாக்கிங் சென்று வர, அதனைப் பார்த்த எழில் "எங்க வாக்கிங்கா" என கேட்க செழியன் என்கிட்ட பேசாத என கோபப்படுகிறான். பிறகு அமிர்தா செழியனுக்கு காபி போட்டு கொண்டு வந்து கொடுக்க அவன் அதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் உடனே வாங்கிக் கொண்டு குடிக்கிறான்.


இதனையடுத்து ஈஸ்வரி தலை வலியில் உட்கார்ந்து இருக்க அமிர்தா காபி போட்டு அதனை ஜெனியை ஈஸ்வரியிடம் கொடுக்க சொல்லிக் கொடுக்க நீங்களே போய் கொடுங்க பாட்டி தனியா இருக்கும்போது கோபப்பட மாட்டாங்க இப்படித்தான் பேசி அவங்களோட மிங்கிளாக முடியும் என சொல்லி அமிர்தாவை அனுப்புகிறார் ஜெனி. 

அதனைத் தொடர்ந்து தயக்கத்துடன் வரும் அமிர்தா காபியை கொடுக்க ஈஸ்வரி கோபப்பட்டு தட்டிவிட்டு கப்பை கீழே போட்டு உடைக்கிறார். அதுமட்டுமல்லாது "எனக்கு உன்னை புடிக்கல இந்த கல்யாணத்தை நான் ஒரு போதும் ஏத்துக்க மாட்டேன்" என சத்தம் போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. இதற்குப் பின்னர் என்ன நடக்கப் போகிறது என்பதை அடுத்த எபிசோட்டில் பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement