• Apr 28 2024

கிணத்தை காணோம் என்ற காமெடியை உருவாக்கினதே மாரிமுத்து தான்- மனம் உருகப் பேசிய வடிவேலு

stella / 7 months ago

Advertisement

Listen News!

திரைப்பட இயக்குநரும் குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து நேற்று காலை சென்னையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பின்னர் சென்னையில் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று காலை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலைதேரிக்கு அதிகாலை 6:00 மணி அளவில் அவரது உடல் கொண்டுவரப்பட்டது.


பின்னர் அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு  நடிகர் விமல், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஏராளமானோர் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.

அவரது இறுதி ஊர்வலத்தில் அந்த கிராமத்தில் உள்ள, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே கலந்து கொண்டு வழியனுப்பிய காட்சிகள் பார்ப்பவர்கள் கண்களையே குளமாகியது.அத்தோடு சில மணித்தியாலத்திற்கு முதல் இவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.இந்த நிலையில் இவருடைய முதல் படமான கண்ணும் கண்ணும் படத்தில் நடித்த வடிவேலு பேட்டியளித்துள்ளார்.


அதில் அவர் கூறியதாவது தம்பியின் 13ம் நாள் கடமைகளை முடிச்சிட்டு இருந்த போது தான் இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டேன். என்னால நம்பவே முடில, ஏன் சினிமாவில் இப்படி திடீர் மரணங்கள் நடக்கின்றது எனத் தெரியல.இது தான் பெரிய இழப்பாக இருக்கு, கண்ணும் கண்ணும் படத்தில அடிச்சுக்கூடக் கேட்பாங்க சொல்லிடாத என்ற காமெடியையும் கிணத்தைக் காணோம் என்ற காமெடியையும் சொல்லிக் கொடுத்தாரு. ரொம்பவும் திறமையான மனுஷன். அவருக்கு இப்பிடி ஆச்சு என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கு என்றும் தெரிவித்துள்ளார்.




Advertisement

Advertisement

Advertisement