• May 20 2024

தனுஷ் செய்கிற அக்கிரமத்திற்கு அளவு இல்லையா? பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கார்த்திக் நரேனின் 'மாறன்' படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார் தனுஷ். மேலும் இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.

இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு 'நானே வருவேன்' படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். மேலும் புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்.

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அண்மையில் பிரிவதாக அறிவித்ததது கோலிவுட் வட்டாரத்திற்கே மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. மேலும் தனுஷ் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி அதில் அவரே ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். மேலும், தனுஷின் ஹாலிவுட் படமான தி கிரே மேனும் ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில் தனியார் யூடிப் சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்த தயாரிப்பாளர் கே. ராஜன், தனுஷ் குறித்து பேசினார். எனினும் அப்போது, கர்ணன், அசுரன் படத்தின் மூலம் தான் ஒரு நடிகன் என்பதை நிரூபித்துக் காட்டினார். ஆனால் அவர் மேல் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் தமிழில் ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு முடிய 20 நாள்களே இருந்த நிலையில் ஹிந்தியில் வாய்ப்பு தேடி வர தமிழில் நடித்த படத்தை அப்படியே கிடப்பில் போட்டு ஹிந்திக்கு ஓடி விட்டார்.

மேலும் அப்போ இந்த தமிழ் படத்தை நம்பி பணம் போட்டவர் கதி? இதெல்லாம் எவ்ளோ அயோக்கியத்தனம்? இது தயாரிப்பாளருக்கு செய்யும் துரோகம் இல்லையா? இவர் செய்கிற அக்கிரமத்திற்கு அளவு இல்லையா? இந்த மாதிரி செயல்களை எல்லாம் விட்டு விட்டு எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வழிவகுக்க வேண்டும். அத்தோடு தமிழில் இன்னும் பல படங்கள் நல்ல படியாக பண்ணினால் எங்கேயோ போய்விடுவார் என தனுஷ் குறித்து பரபரப்பாக பேசியுள்ளார் கே.ராஜன்.

Advertisement

Advertisement